Wednesday, February 13, 2013

தமிழ் வளர்க்கணும்னா கொஞ்சம் கற்கணும்ல?




முகநூலில், திரு.ஆனந்தன் அமிர்தன் அவர்கள் தன் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து, பின்னர் நாம் அனைவரும் அறியும் பொருட்டு முகநூளில் பகிர்ந்த பதிவு.. நாமும் முயற்சிக்கலாமே!..

தமிழ் வளர்க்கணும்னா கொஞ்சம் கற்கணும்ல?

இலக்கணம் என்பது ஒழுங்கு, அமைப்பு என்று பொருள்படும். அசை பிரித்தல் பற்றிய ஒரு சிறு விளக்கம்.

தமிழில் ஒலி மாத்திரை (மாத்திரை என்றாலே அளவு) என்பது ½, 1, 2 என்ற அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது. நாம் உச்சரிக்கும் ஒலியின் அளவே மாத்திரைகள் என்று கொள்ளப்படுகிறது.

சொல்லிப் பாருங்களேன் “க்” (மெய்/ஒற்று) – ½ மாத்திரை, “க” (குறில்) – 1 மாத்திரை, “கா”(நெடில்) - 2 மாத்திரைகள்.

“அசை”கள் இரண்டு மட்டுமே : நேர் & நிரை :
நிரை – கட்டாயம் இரண்டு எழுத்துக்களாக மட்டுமே வரும். முதல் எழுத்து குறிலாகவும் இரண்டாவது எழுத்து குறில் (அ) நெடிலாக வரலாம்.


நேர் – பெரும்பாலும் நெடிலிலேயே(எ:கா நீ, நான், சேர், போர்) ஆரம்பிக்கும் என்றாலும், குறிலில் ஆரம்பித்து அடுத்து ஒற்று(மெய்)டன் வந்தாலும் நேர் எனப்படும். (எ:கா) நெல்,சொல்,மண், கண்).

சீர் : (வார்த்தை) இது,
ஓரசைச்சீர்(வா,செய்,மான்),
ஈரசைச்சீர்(திரு/மணம், மா/மன், நீ/ரலை) மூவசைச்சீர்(நீர்ப்/பற/வை, நற்/செய்/தி, வரு/மா/னம், வரு/வா/யென) என வகைப்படுத்தப் படுகிறது.

மேலேயிருக்கும் அசை மற்றும் சீர்ககளை வைத்தே,
நேர் + நேர் = தே/மா. (காய்ச்சீர் + காய்ச்சீர்)
நிரை + நேர் = புளி/மா. (கனிச்சீர் + காய்ச்சீர்)
நேர் + நிரை = கூ/விளம். ( காய்ச்சீர் + கனிச்சீர்)
நிரை + நிரை = கரு/விளம். (கனிச்சீர் +கனிச்சீர்) என வடிவமைக்கப் பட்டுள்ளது.

மூவசைச் சீரில் இறுதியில் நேர் வந்தால், “காய்” என்றும் நிரை வந்தால் “கனி” என்றும் பிரிக்கவேண்டும். ( தேமாங்காய்/ தேமாங்கனி, புளிமாங்காய்/கனி, கூவிளங்காய்/கனி, கருவிளங்காய்/கனி).

இது தவிர வெண்பாவில் (திருக்குறள் எல்லாமே வெண்பா தான்) கடைசி வார்த்தை எல்லாச் சீருமே,
“நாள்(நேர்), மலர்(நிரை), காசு(நேர்/நேர்), பிறப்பு(நிரை/நேர்)” என்ற வகையில் மட்டுமே அமையும்.

நன்றி: ஆனந்தன் அமிர்தன்

மற்றும் முகநூல்

Saturday, February 9, 2013

எங்கள் தோட்டத்தில் சுரேஷ் பிடித்த பாம்பு.

Tuesday, February 5, 2013

என் நண்பர் திரு. சுரேஷ்குமார் அவர்கள் பாம்பு பிடித்த பொழுது எடுத்த படம்.


என் நண்பர் திரு. சுரேஷ்குமார் அவர்கள், கேரளா சுற்றுலா சென்ற பொழுது, அங்கே ஒரு பாம்பு சென்றதை பார்த்து அதை அவர் பிடித்த பொழுது எடுத்த படம்.

SNAKE CATCHING BY SURESH, TIRUPUR








Sunday, February 3, 2013

எங்கள் தோட்டம்


எனது கணினியில் உள்ள தாய் அட்டையில் (Mother Boardக்கு தமிழில் வேறு வார்த்தை என்ன???)  ஏற்ப்பட்ட பழுதினால் ஒரு சிறு இடைவெளி ஏற்ப்பட்டு விட்டது. 



நண்பர்களே எங்கள் தோட்டம் பற்றி எங்கள் நண்பன் திரு.உதயகுமார்

எழுதியது.




http://tamiludhayan.blogspot.in/2013/01/blog-post_24.html

Tuesday, January 8, 2013

சினிமாக்காரர்களின் வேலை நிறுத்தம் - நியாயமா????



ஒரு சாதாரண வியாபாரம் செய்தாலும் சேவை வரி செலுத்துகிறான் சாமானியன்.  ஆனால் கோடிக் கணக்கில் வருமானம் இவர்கள் சேவை வரி கட்ட முடியாது என சொல்கிறார்கள். அவங்க நடித்த படத்தை பார்க்க சாமானியன் வரி கட்டுகிறான் ஆனால் இவங்க கட்ட மாட்டார்களாம். என்ன கொடுமை சார் இது. 

பாவம் இவங்களுக்கு யாருயா வரி போட்டது??? இந்த ஏழைங்க எப்படியா கட்டுவாங்க??









இதே நடிகர்கள் காவிரி நீருக்காக  உண்ணாவிரதம் இருந்தாங்களா??.   இவங்களுக்கு ஒரு பாதிப்பு எனும் போது மட்டும் ஒன்றாக இருப்பார்கள்.  இவர்கள் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் மிக சிறந்த நடிகர்கள்.  நம் அரசியல்வாதிகள் அனைவரும் இவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.








அரசாங்கமே, இவர்களின் மேல் விதித்த சேவை வரியை  வாபஸ் வாங்காதே.

Monday, January 7, 2013

ஒரு தத்துவம்



சில மாதங்களுக்கு முன்பு நான் ஒரு புத்தகத்தில் படித்தது

     தினம் இரண்டு,
                  வாரம் இரண்டு,
                                 மாதம் இரண்டு,
                                                வருடம் இரண்டு.


இது நம் முன்னோர்கள் வகுத்தது.

இதன் பொருள் என்ன என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.




இதன் பொருள் நமக்கு, மிக உபயோகமானது.


இதனுடைய பதில் வரும் நாட்களில் !!!

Tuesday, January 1, 2013

நமது பாரம்பரிய உணவு - சிறு அறிமுகம்


        நேற்று இரவு உணவுக்கு நான் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நமது ஊரான திருப்பூரில் நடைபெறும் " நளன் உணவகத்தின் " ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெறும் உணவுத் திருவிழாவிற்கு சென்று இருந்தோம்.   அங்கே இருந்த உணவு பட்டியலை பார்த்து மலைத்து விட்டேன்.  பல உணவுகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம்.   அந்த பட்டியலை பார்த்த போது ஒன்று தெரிந்தது, நமது முன்னோர்கள் எவ்வளவு சத்தான உணவுகளை சாப்பிட்டு  இருக்கின்றனர்.


நான் அங்கே பார்த்த சில உணவு வகைகள் வருமாறு


1.  புட்டு வகைகளில் - மக்கா சோளம்,  அரிசி, கம்பு, ராகி
2.  இட்லி வகைகளில் - காய் கறி, திணை, கொள்ளு, கம்பு
3. தோசை வகைகளில் - திணை, சாமை, தக்காளி, குதிரை வாலி
4. சப்பாத்தி வகைகளில் - சீரக சப்பாத்தி, சுக்கா சப்பாத்தி, மற்றும் சில
5. பாயசம் வகைகளில் - சாமை, அவல்
6. சித்ரன்னம் வகைளில் - நெல்லி, மல்லி, தக்காளி,

மேலும் சாம்பார் மற்றும்  10 வகை சட்னி மற்றும் பல உணவுகள்.


ஆனால் இன்றோ நாம் நமது பாரம்பரியமான சத்தான உணவுகளை விட்டு விட்டு வேறு நாட்டு உடம்புக்கு கேடு விளைவிக்கக் கூடிய துரித உணவுகளை அதிகமாக விரும்புகிறோம். 

அட, நாங்கள் என்ன சாப்பிட்டோம்  என சொல்ல வில்லையே, நாங்கள் சாப்பிட்டது, மேல் சொன்ன 4 வகை இட்லி, மக்கா சோள புட்டு, தக்காளி தோசை, சாமை தோசை, நெல்லி சாதம், இரண்டு வகை பாயசம்.  அனைத்தும் அருமை.  நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்.

HAPPY NEW YEAR TO ALL