நேற்று இரவு உணவுக்கு நான் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நமது ஊரான திருப்பூரில் நடைபெறும் " நளன் உணவகத்தின் " ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெறும் உணவுத் திருவிழாவிற்கு சென்று இருந்தோம். அங்கே இருந்த உணவு பட்டியலை பார்த்து மலைத்து விட்டேன். பல உணவுகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த பட்டியலை பார்த்த போது ஒன்று தெரிந்தது, நமது முன்னோர்கள் எவ்வளவு சத்தான உணவுகளை சாப்பிட்டு இருக்கின்றனர்.
நான் அங்கே பார்த்த சில உணவு வகைகள் வருமாறு
1. புட்டு வகைகளில் - மக்கா சோளம், அரிசி, கம்பு, ராகி
2. இட்லி வகைகளில் - காய் கறி, திணை, கொள்ளு, கம்பு
3. தோசை வகைகளில் - திணை, சாமை, தக்காளி, குதிரை வாலி
4. சப்பாத்தி வகைகளில் - சீரக சப்பாத்தி, சுக்கா சப்பாத்தி, மற்றும் சில
5. பாயசம் வகைகளில் - சாமை, அவல்
6. சித்ரன்னம் வகைளில் - நெல்லி, மல்லி, தக்காளி,
மேலும் சாம்பார் மற்றும் 10 வகை சட்னி மற்றும் பல உணவுகள்.
ஆனால் இன்றோ நாம் நமது பாரம்பரியமான சத்தான உணவுகளை விட்டு விட்டு வேறு நாட்டு உடம்புக்கு கேடு விளைவிக்கக் கூடிய துரித உணவுகளை அதிகமாக விரும்புகிறோம்.
அட, நாங்கள் என்ன சாப்பிட்டோம் என சொல்ல வில்லையே, நாங்கள் சாப்பிட்டது, மேல் சொன்ன 4 வகை இட்லி, மக்கா சோள புட்டு, தக்காளி தோசை, சாமை தோசை, நெல்லி சாதம், இரண்டு வகை பாயசம். அனைத்தும் அருமை. நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்.
ஏம்பா அங்க இதை எப்படி செய்யறதுன்னு ரெசிபி புக் இருந்துன்னா வாங்கிட்டு வந்து இருக்கலாம் இல்ல?
ReplyDeleteஎனிவே, பதிவுகளில் சின்ன சின்ன புகைபடங்கள், அங்காங்கே எடுத்தது இருந்தால் சேர்க்கவும்.